WhatsApp: வாட்ஸ் அப்பில் பணப்பரிவர்த்தனை..மேலும் 6 கோடி பயனர்களுக்கு அனுமதி!

Published by
பாலா கலியமூர்த்தி

வாட்ஸ் அப் பே மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள அதன் பயனர்களின் எண்ணிக்கை 4 கோடியில் இருந்து 10 கோடியாக உயர்வு.

யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) என்ற டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை வசதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், கூகுள் பே, ஃபோன் பே, paytm உள்ளிட்ட செயலிகள் மூலம் பணம் செலுத்துவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சமயத்தில், வாட்ஸ் அப்பில், வாட்ஸ் அப் பே என்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வசதியை அறிமுகம் செய்த பின், டிஜிட்டல் பேமண்ட்ஸ் பயன்பாடுகள் மேலும் அதிகரித்தது.

அதன்படி, குறிப்பாக இந்தியாவில் வாட்ஸ் அப் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள ஏற்கனவே, 40 மில்லியன் (4 கோடி) பயனர்களுக்கு அனுமதிக்க NPCI என்ற யுபிஐ நிறுவனம் அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில், வாட்ஸ் அப்பிற்கான (WhatsApppay) UPI மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள கூடுதலாக 60 மில்லியன் அதாவது 6 கோடி பயனர்களை அதிகரித்து நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) அனுமதி வழங்கியுள்ளது.

இதன் மூலம் வாட்ஸ்அப் தனது 100 மில்லியன் (10 கோடி) பயனர்களுக்கு சேவையை விரிவுபடுத்த முடியும் என NPCI அறிவித்துள்ளது. NPCI என்பது இந்தியாவில் டிஜிட்டல் முறையில் சில்லறை கட்டணங்கள் மற்றும் தீர்வு அமைப்புகளை இயக்குவதற்கான ஒரு அமைப்பாகும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சில்லறை கட்டண முறைகளில் புதுமைகளைக் கொண்டுவருவதில் NPCI கவனம் செலுத்துகிறது. இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) 2008-இல் ஒரு அமைப்பாக இணைக்கப்பட்டது.

முழுமையான டிஜிட்டல் சமூகமாக இருக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோட்பாட்டை மேம்படுத்தும் வகையில், குறைந்த செலவில், நாடு தழுவிய அணுகலுடன் பாதுகாப்பான கட்டண தீர்வுகளை இது எளிதாக்குகிறது. இது இந்தியாவில் சில்லறை விற்பனை மூலம் பணம் செலுத்தும் முறையை மாற்றியுள்ளது. RuPay அட்டை, உடனடி கட்டண சேவை (IMPS), ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் போன்ற கட்டண தயாரிப்புகள் (UPI), பணத்திற்கான பாரத் இடைமுகம் (BHIM), BHIM ஆதார், தேசிய மின்னணு டோல் சேகரிப்பு (NETC) Fastag) மற்றும் பாரத் பில்பே ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

36 minutes ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

1 hour ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

2 hours ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

2 hours ago

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

3 hours ago

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

11 hours ago