லக்னோ சென்ற பிரதமர் மோடி லக்கிம்பூர் செல்லாதது ஏன்? என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் மீதான வன்முறையின் பின்னணியில் கைது செய்யப்படவில்லை. விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு அகங்காரத்தின் காரணமாக நிராகரிக்கிறது.
லக்கிம்பூர் செல்ல தனக்கு உத்தர பிரதேச அரசு விதித்த தடை உத்தரவு பொருந்தாது. விவசாயிகள் கொல்லப்பட்ட வன்முறையின் பின்னணியில் உள்ளவர்கள் கைது செய்யப்படவில்லை. லக்கிம்பூர் சென்று உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க உள்ளோம் என தெரிவித்தார்.
வன்முறைக்கு காரணமான மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகன் கைது செய்யப்படவில்லை என குற்றசாட்டினார். எதிர்க்கட்சியின் பணியே அரசுக்கு அழுத்தம் கொடுப்பது தான். எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தால் தான் இந்த அளவிற்கு கூட நடவடிக்கை எடுக்கப்பட்டியிருக்கிறது.
நேற்று லக்னோ சென்ற பிரதமர் மோடி லக்கிம்பூர் செல்லாதது ஏன்? கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் அரசு கட்டுப்படுத்துவதாகவும் விமர்சித்தார். அரசியல் தலைவர்களை உத்தர பிரதேசத்தில் அனுமதிக்க மறுப்பது ஏன்? என்றும் தடை மீறி லக்கிம்பூர் செல்ல ராகுல் திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகிறது எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது…
டெல்லி : பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இல் விளையாடிய இளம் வீரர், 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி…
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள நிலையில், நேற்று முதல் நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டு…
சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால்,…
சென்னை : தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16 (இன்று) காலை 9:00 மணிக்கு…
சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத்…