நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரின் மனைவி…!

Published by
Rebekal

முன்னாள் மத்திய அமைச்சர் பி.ஆர்.குமாரமங்கலம் அவர்களின் மனைவி கிட்டி டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நள்ளிரவில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் பிஆர் குமாரமங்கலம் அவர்களது மனைவி கிட்டி குமாரமங்கலம் அவர்கள் டெல்லியில் உள்ள வசந்த் விகார் எனும் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றி வரும் கிட்டியின் அவரது வீட்டில் சிலர் நேற்றிரவு கொள்ளை அடித்த பின்பு கிட்டியை கொலை செய்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் முன்னாள் மத்திய அமைச்சர் குமாரமங்கலம் அவர்களின் வீட்டுக்கு அருகில் வசித்து வந்த ராஜு என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், கொலை தொடர்பாக இருவரை போலீசார் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில் கிட்டி குமாரமங்கலம் வீட்டில் பணிபுரியக்கூடிய மஞ்சு என்னும் பெண் தங்களுக்கு தொலைபேசியில் அழைத்து தகவல் தெரிவித்ததாகவும், கைது செய்யப்பட்டுள்ள ராஜூ எனும் நபர் இரவு ஒன்பது மணி போல வீட்டிற்கு வந்ததாகவும் அதன் பின்பு அவரது உதவியாளர்கள் இருவரும் வீட்டிற்கு வந்ததாகவும் தன்னை தாக்கி விட்டு வீட்டிற்குள் சென்று கிட்டியை கொலை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் கொள்ளையடிக்க வந்த ராஜு மற்றும் அவரது உதவியாளர்கள் நகை மற்றும் பணத்துடன் வெளியேறிய பின்பு வீட்டு பணிப்பெண் மஞ்சு தனது கட்டை அவிழ்த்துவிட்டு அருகில் இருந்தவர்களின் உதவியை நாடியுள்ளார். அதன் பின்பு இந்த சம்பவம்  குறித்து கிட்டியின் மூத்த மகன் மோகன் குமாரமங்கலம் அவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் காயம் ஏற்பட்டதால் கிட்டியின் வீட்டு பணிப்பெண் மஞ்சு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தப்பி சென்ற இரு நபர்களை தேடி வருவதாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

9 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

9 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

10 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

10 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

11 hours ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

12 hours ago