பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமிக்க கட்சி மேலிடம் திட்டம் என தகவல்.
பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமிக்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநில அமைச்சரவையில் இடம் பெறமாட்டார் எனவும் கூறப்படுகிறது. மேலும், பஞ்சாப் முதல்வராக அம்ரிந்தர் சிங் தொடர்வார் என்றும் அவரை மாற்ற காங்கிரஸுக்கு திட்டமில்லை எனவும் தகவல் வெளியாகயுள்ளது.
காங்கிரஸ் கட்சியிலிருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து சமீபத்தில் ஒரு ட்விட்டை பதிவிட்டிருந்தார். அதில், தனது பணியையும் தொலைநோக்கு பார்வையையும் எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி எப்போதுமே அங்கீகரித்து வந்துள்ளது என்றும் மாநிலத்திற்காக யார் உண்மையாக போராடுகிறார் என்பதையும் ஆம் ஆத்மி கட்சி அறிந்து வைத்துள்ளது எனவும் தெவித்திருந்தார்.
கடந்த சில மாதங்களாகவே, சித்துவுக்கும் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்குக்கும் மோதல் வெடித்து வருகிறது. இதனிடையே, இந்த பதிவு அவர் கட்சி மாறுகிறாரா என்ற கேள்வியை எழுப்பியது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக சித்துவை நியமிக்க கட்சி மேலிடம் திட்டம் வைத்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…