டெல்லியில், அனைத்து மதுபான வகைகளுக்கும் கூடுதலாக 70 சதவீத கலால் வரி விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மார்ச் 24 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல் நாடு முழுவதும் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டது. இந்நிலையில், 40 நாட்கள் நிறைவடைந்து பிறகு, இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகளை முன்வைத்து பிரிக்கப்பட்ட ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டன.
அதன்படி, டெல்லியில் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. இதனால், மதுபிரியர்கள் ஆர்வத்துடன் கிமீ கணக்கில் வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். இந்நிலையில், அம்மாநில முதல்வர்அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், மக்கள் பாதுக்காப்பு நடவடிக்கைகளை மீறினால் ஊரடங்கு தளர்வு திரும்ப பெற்றுக்கொள்ளப்படும் எனவே அறிவித்தார்.
மேலும், நேற்று ஓர் சுற்றறிக்கை வெளிவந்தது. அதன்படி, அனைத்து மதுபான வகைகளுக்கும் கூடுதலாக 70 சதவீத கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மதுபாட்டிகள் விலை கடுமையாக உயரும் என கூறப்படுகிறது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…