மகாராஷ்டிராவில் வேலையின்றி வருமானமின்றி தவித்ததால் திருமண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
அவுரங்காபாத்தை சேர்ந்த 27 வயது பெண் மகாராஷ்டிராவில் திருமணம் என்ற பெயரில் பல ஆண்களை ஏமாற்றியதை அடுத்து சனிக்கிழமையன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.அதில் ஏமாறிய ஒருவரான யோகேஷ் ஷிர்ஷாத் என்பவர் அளித்த புகாரின் பேரில் இச்சம்பவம் வெளிக்கு வந்தது .கொரோனா காரணமாக வேலையிழந்த பெண்ணான விஜயா அம்ருத் நிதி நெருக்கடியின் காரணமாக திருமண மோசடியில் இறங்கியதாகவும், கடந்த மூன்று மாதங்களில் மூன்று பேரை திருமணம் செய்துள்ளதாகவும்,திருமணமான சில நாட்களில் விலைமதிப்புள்ள பொருட்களுடன் தப்பித்து ஓடி விடுவதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதில் முதலில் லோகேஷ் அவர்களை மணந்த அம்ருத் அடுத்த 15 நாட்களில் அவரிடமிருந்து ஆபரணங்களை எடுத்து கொண்டு தப்பியுள்ளார்.அதனையடுத்து ரோகாட்டின் கர்ஜாட்டில் வசிக்கும் சந்தீப் தாரடே என்பவரையும்,அதன் பிறகு மேற்கு மகாராஷ்டிராவை சேர்ந்த ஒருவரையும் ஏமாற்றியதாக ஒப்புக் கொண்டுள்ளார்.இதில் லோகேஷ் தனது மனைவியை காணவில்லை என தேடிய போது தான்,பெண் பலரையும் ஏமாற்றுவது தெரிய வந்ததாகவும், அதனையடுத்து புகார் செய்ததாகவும் கூறப்படுகிறது.
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…