கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய்கடி ஊசி செலுத்திக் கொண்ட பெண்கள்…! பின்னணி என்ன …?

Published by
லீனா

உதிப்பிரதேசத்தில், கொரோனா தடுப்பூசிக்கு  பதிலாக வெறிநாய் கடிக்கான ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும், கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வண்ணம், கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், உத்தரப்பிரதேசத்தின், ஷாம்லி மாவட்டத்தை சேர்ந்த சரோஜ், அனார்கலி, சத்தியவதி ஆகிய மூன்று பெண்களும், அதே பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக சென்றுள்ளனர். அங்கு அவர்கள் மூவருக்கும், கொரோனா தடுப்பூசிக்கு  பதிலாக வெறிநாய் கடிக்கான ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இது தற்போது சர்ச்சையாகியுள்ள நிலையில், இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர்  கூறுகையில், சுகாதார மையத்தின் முதல் தளத்தில் தான் தற்போது தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆனால்  இந்த பெண்கள் மற்றொரு பிரிவுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த மருத்துவர் அவசர வேலையாக சென்றதால், அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துமாறு மற்றொரு நபரிடம் கூறியுள்ளார். அந்த நபர் தவறுதலாக வெறிநாய்கடிக்கான, ரேபீஸ் தடுப்பு ஊசியை செலுத்தி உள்ளார் என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த தவறுக்கு காரணமானவர்களை சஸ்பெண்ட் செய்யும்படி தலைமை சுகாதார அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், இது குறித்து விரிவான விசாரணை நடக்கிறது என்றும், இதுதொடர்பான அறிக்கை கிடைத்தபின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!

ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

8 minutes ago

175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?

வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…

47 minutes ago

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்.? ஊர்ந்தீர்களா? தவழ்ந்தீர்களா? ஸ்டாலின் மீது இபிஎஸ் விமர்சனம்.!

சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…

52 minutes ago

MI vs DC: பிளே ஆஃப்-க்கு தகுதி பெறப்போவது யார்? டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு.!

மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும்  டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…

2 hours ago

அனகாபுத்தூர் ஆற்றங்கரையோர மக்களுக்கு மாற்று வீடு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அடையாறு நதியை…

3 hours ago

விசாகா கமிட்டி அமைக்காதது ஏன்? – அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி.!

சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…

3 hours ago