கேரள மாநிலத்தில் மலாபுரத்தில் ஒருவரது கோழி பண்ணையில் ஆறு கோழிகள் பச்சை கருவுடன் முட்டையிட்டு வருகின்றன. அதனால், விஞ்ஞானிகள் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரத்தில் வசித்து வரும் ஏ.கே.ஷிஹாபுதீனின் என்பவரது கோழி பண்ணையில் இருக்கும் குறிப்பிட்ட ஆறு கோழிகள் பச்சை மஞ்சள் கருவுடன் கூடிய முட்டைகளை தொடர்ந்து இட்டு வருகின்றன.
இந்த சம்பவம் குறித்து ஏ.கே.ஷிஹாபுதீனின் கூறுகையில், ஒன்பது மாதங்களுக்கு முன்பு ஒரு கோழி மஞ்சள் பச்சை கரு முட்டையிட்டது. பயந்து போய் அதனை நாங்கள் உட்கொள்ளவில்லை. அந்த பச்சை கரு முட்டை குஞ்சு பொரித்து, தற்போது அந்த கோழிகளும் பச்சை கருவுடன் முட்டையிட்டு வருகின்றன.
இந்த நிகழ்வு குறித்து, கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் (கே.வி.ஏ.எஸ்.யூ) விஞ்ஞானிகள் தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆய்வில் உள்ள பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ஹரிகிருஷ்ணன் கூறுகையில், கோழி தீவனத்தில், ஏதேனும் கூடுதல் ஊட்டச்சத்து கொடுத்தால் இந்த மாதிரி மஞ்சள் கரு மாற்றம்காணப்படும். ஆனால், ஏ.கே.ஷிஹாபுதீனின் தனது கோழிகளுக்கு எந்தவித கூடுதல் ஊட்டச்சத்து உணவு வழங்கப்படவில்லை என கூறியுள்ளார்.
இதனால், பச்சை கரு முட்டையிடும் இரு கோழிகளை விஞ்ஞானிகள் வளர்த்து வருகின்றனர். அந்த கோழிகளுக்கு சாதாரண கோழித்தீவனங்களை கொடுத்து வருகின்றனர். அதன் மூலம் பச்சை கரு நிறம் மாற்றம் அடைய வாய்ப்புள்ளது. அப்படி இல்லையென்றால் ஆராய்ச்சி முடிவுகள் ஆராய மூன்று வாரங்கள் வரை தேவைபடலாம் என கூறியுள்ளார்.
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…