Categories: இந்தியா

யமுனை நீர்மட்டம் 207.72 மீட்டரை எட்டுவது டெல்லிக்கு மோசமான செய்தி..! முதல்வர் கெஜ்ரிவால் கவலை.!

Published by
செந்தில்குமார்

யமுனை நீர்மட்டம் 207 மீட்டரை எட்டுவது மோசமான செய்தி என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கவலை தெரிவித்துள்ளார்.

கடந்த 3 நாட்களாக வடமேற்கு இந்தியாவில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும்பாலான இடங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்நிலையில், யமுனை நீர்மட்டம் 207 மீட்டரை எட்டுவது மோசமான செய்தி என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கவலை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டெல்லியில் யமுனை நதி நீர்மட்டம் அபாயக் குறி அளவான 205.33 மீட்டரைக் கடந்ததாக மாநில அரசு தெரிவித்தது. இந்நிலையில் யமுனை நீர்மட்டம் 207.72 மீட்டர் என உள்ளதாக என மத்திய நீர் ஆணையம் கணித்துள்ளது என்றும் இது டெல்லிக்கு நல்ல செய்தி இல்லை என்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கவலை தெரிவித்த அவர், டெல்லியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்யாத நிலையில், ஹத்னிகுண்ட் தடுப்பணையில் ஹரியானா மாநிலம் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு தண்ணீர் திறந்து விடுவதால் யமுனையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மத்திய அரசு தலையிட்டு யமுனையில் நீர்மட்டம் மேலும் உயராமல் இருப்பதை உறுதி செய்ய வலியுறுத்துங்கள் என்று கூறியுள்ளார்.

முன்னதாக,யமுனா நதியில் நீர்மட்டம் 206 மீட்டரைக் கடந்தால், ஆற்றின் கரையோரங்களில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியை தொடங்குவோம் என கூறியிருந்தார். அதன்படி, வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களை வேறு இடத்திற்கு மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

26 minutes ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

33 minutes ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

57 minutes ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

1 hour ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

2 hours ago

“வாழ்வில் ஒளியாக வந்தவர்”.., கெனிஷா என் வாழ்க்கை துணையாக மாறியதாக ரவி மோகன் அறிக்கை.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…

2 hours ago