அனைத்து அரசு அலுவலகங்களும் இன்று முதல் ஓபன் – யோகி ஆதித்யநாத் உத்தரவு.!

Published by
பாலா கலியமூர்த்தி

உத்தரபிரதேசம் மாநிலத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் இன்று முதல் திறக்கப்படும் என யோகி ஆதித்யநாத் உத்தரவு.

நாடு முழுவதும் கொரோனா என்ற கொடிய நோயால் நான்காம் கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் ஊரடங்கால் நாடு கடும் பொருளாதார சரிவை கண்டுள்ளது. இதன் காரணமாக இந்த 4 ஆம் கட்ட ஊரடங்கில் நிறைய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, பல்வேறு மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களை கொண்டு இயங்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உத்தரபிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது, இதன் கீழ் அனைத்து மாநில அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் இன்று முதல் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவின்படி, அனைத்து அலுவலகங்களும் 3 ஷிப்டுகளிலும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை 3 ஷிப்டுகளில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். அனைத்து ஊழியர்களும் மாற்று நாளில் அலுவலகத்திற்கு வரும் வகையில் துறை அல்லது அலுவலகத் தலைவர் தனது அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பட்டியலை உருவாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனுடன், ஒவ்வொரு பணியாளரும் தங்கள் செல்போனில் ஆரோக்யா சேது செயலியை பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ‘கூட்டணி ஆட்சி’ தான் – மத்திய அமைச்சர் அமித்ஷா!

அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ‘கூட்டணி ஆட்சி’ தான் – மத்திய அமைச்சர் அமித்ஷா!

கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…

10 minutes ago

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…

59 minutes ago

கடலூர் ரயில் விபத்து : உண்மை காரணம் என்ன? விசாரணையில் உறுதி செய்யப்பட்ட தகவல்!

கடலூர் : மாவட்டத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய ரயில் விபத்தில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.…

1 hour ago

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

14 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

14 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

15 hours ago