வாட்சப்பில் தனது குடும்பத்தினரிடம் தாம் தற்கொலை செய்யப்போவதாக கூறிவிட்டு இறந்த இளைஞன்!

Published by
Sulai

டெல்லியில் உள்ள சாந்தினி சோக்க்கில் ஹர்ஷ் கண்டேல்வால் என்ற இளைஞர் தனது திருமணமான சகோதரி உட்பட நான்கு பேர் கொண்ட குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.இவர் ஆன்லைன் நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர் ஜூன் 30-ம் தேதி இரவு தனது நண்பரின் மனைவியின் பிறந்தநாளை கொண்டாடசெல்வதாக சென்றுள்ளார்.பின்னர் ஜூலை 1-ம் தேதி அவரின் குடும்பத்தினருக்கும் நெருங்கிய உறவினருக்கும் ஒரு வாட்ஸ் அப் சேத்தி வந்துள்ளது.

அதில் தயவு செய்து என்னை மன்னியுங்கள் மம்மி,பாப்பா எனது ஸ்கூட்டர், பர்ஸ் மற்றும்பிற பொருட்கள் ITO பாலத்தில் இருக்கும் அந்த பாலத்தின் அடியில் எனது உடல் இருக்கும் என்று பதிவு செய்யப்பட்டிருந்துள்ளது.

இந்த பதிவை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.உடனே அந்த பாலத்திற்கு சென்று பார்த்துள்ளனர் அதில் அவரது பொருட்கள் இருந்துள்ளன.ஆனால் அவரின் உடல் அந்த பாலத்தின் அடியில் இல்லை.

பின்னர் அவரின் குடும்பத்தினர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.ஆனால் அவர்களின் புகாரை காவல்துறையினர் அப்போது அலச்சியமாக எடுத்து கொண்டதாக ஹர்ஷின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஜூலை 3-ம் தேதி ஹர்ஷின் உடலை யமுனை ஆற்றில் இருந்து கண்டெடுத்துள்ளனர்.தற்போது அவரின் குடும்பத்தினர் இது ஒரு கொலை வழக்கு என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஜூலை 1-ம் தேதி காலையில் ஹர்ஷிடம் பேசியதாகவும் அவர் சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்துவிடுவேன் என்று கூறியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.ஆனால் சில நிமிடங்களில் வாட்ஸ் அப்பில் இவ்வாறு பதிவு வந்ததை எண்ணி சந்திக்கமடைந்துள்ளனர்.

தற்போது காவல்துறையினர் ஹர்ஷின் நண்பர்களுடன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Recent Posts

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…

5 minutes ago

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

1 hour ago

போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!

ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…

2 hours ago

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் அமல் – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…

2 hours ago

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

13 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

13 hours ago