அக்கா, தங்கை இருவரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்த இளைஞன்.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று முன்னோர்கள் கூறுவதுண்டு. ஏனென்றால் திருமணத்தை அப்படி ஒரு புனிதமான ஒரு நிகழ்வாக கருதுகின்றனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்பது ஒரு விளையாட்டாக மாறிவிட்டது.
அந்தவகையில், கர்நாடகாவில் கோலாரில் உள்ள குருடுமலே கோவிலில் ஒரு திருமண நிகழ்வு நடைபெற்றது. மே 7-ஆம் தேதி இந்த திருமண நிகழ்வு நடைபெற்ற நிலையில் இந்த திருமணம் குறித்து எல்லாரும் பேசும் வகையில் நடைபெற்று முடிந்தது. உமபதி என்ற இளைஞன் தனது உறவினரான லலிதாவை மட்டுமே திருமணம் செய்து கொள்வதாக கூறி இருந்தார். ஆனால், அவர் பேச்சு குறைபாடுள்ளவர்.
இந்நிலையில், திருமணத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், லலிதாவின் சகோதரியையும் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டால்தான் இவரைத்தான் திருமணம் செய்வேன் என்று அவர் கூறியுள்ளார. இதனையடுத்து இரு குடும்பத்தினரும் இந்த விஷயம் தொடர்பாக விவாதித்தனர். பின் இரு சகோதரிகளையும் அவர் திருமணம் செய்து கொள்வார் என்று முடிவு செய்யப்பட்டது.
இதனைதொடர்ந்து, உமபதி ஒரே இடத்தில் சுப்ரியா மற்றும் லலிதா இருவரையும் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், உமாபதியை காவல்துறையினர் கைது செய்தனர். ஏனெனில் அவர் திருமணம் முடித்த இரு பெண்களில் ஒருவர் மைனராவார்.
இதில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சுப்ரியாவின் தந்தை நாகராஜ் ராணியம்மா மட்டும் சுப்பம்மா என்ற உடன் பிறப்புகளையும் ஒரே இடத்தில் திருமணம் செய்துகொண்டார். அவர்களில் ஒருவர் பேச்சு குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…