சமீப காலமாக இளைஞர்கள் பலர் ஆபத்து என தெரிந்தும் ரயில் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்வது , சாகசங்களில் ஈடுபடுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.
நண்பர்களுடன் விளையாட்டுக்காக சில இளைஞர்கள் செய்யும் சில செயல் விபரீதங்களில் போய் முடிந்து விடுகின்றன. தற்போது மும்பையில் அது போன்ற ஒரு சம்பவம் நடந்து உள்ளது. கடந்த 26-ம் தேதி மும்பையில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த 20 வயது தில்ஷன் என்ற இளைஞர் ரயில் படிக்கட்டில் தொங்கியபடி சாகசம் செய்து வந்து உள்ளார்.
தில்ஷன் சாகசம் செய்வதை தில்ஷன் நண்பர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து வந்து உள்ளார். அப்போது திடீரென ஆற்றுப்பாலத்தில் மோதி தில்ஷன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஓடும் ரெயிலில் யாரும் சாகசம் செய்ய வேண்டாம் எனவும் அது சட்டவிரோதமானது என இந்திய ரெயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ரெயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் தில்ஷன் உயிரிழந்த வீடியோவை பதிவிட்டு ,அதில் பாதுகாப்பை பொருட்படுத்தாமல் ரயிலில் இருந்து இறங்குவது , ஓடும் ரயிலில் ஏறுவது சட்டவிரோதமானது என எச்சரித்துள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…