ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. பூஞ்ச் மாவட்டம் திக்வாரின் நகர்கோட் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இது போன்று தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது வழக்கமாகிவிட்டது, ஆனால் அதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 34வது அகில இந்திய மாநாட்டு பொதுக்கூட்டம் ஹிசார்ல் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பல்வேறு மாநிலங்கலங்களை சேர்ந்த விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.திரிபுரா முதலமைச்சர் மாணிக்சர்க்கார் மாநாட்டினை வாழ்த்தியும் மற்றும் இன்றைய இந்தியாவில் விவசாயிகள் படும் துன்பங்கள் அனைத்துக்கும் ஆட்சியாளர்கள் தான் பொறுபேற்க வேண்டும் என்று உரையாற்றினார்.
புதுடில்லி: அமெரிக்காவிலிருந்து, முதல் கச்சா எண்ணெய் கப்பல், இன்று இந்தியா வந்தடைகிறது. நாட்டின் தேவையில் குறிப்பிட்ட பங்கை, அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி நிறைவு செய்வதால், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.1975ல் தடைஅமெரிக்காவில் இருந்து இந்தியா, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய, 1975ல் தடை விதிக்கப்பட்டது. இதனால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், மத்திய கிழக்கு நாடுகளான, ஈரான், குவைத், சவுதி அரேபியா ஆகியவற்றிட மிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், ஜூனில், […]
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து 174 நாள்களாக நடந்துவந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. மேலும், எரிவாயு எடுக்க முயற்சித்தால், போராட்டம் வேறு வடிவில் மீண்டும் தொடங்கும் என்று எச்சரித்தனர் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு பிப்ரவரி 15-ஆம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து, பிப்ரவரி 16-ஆம் தேதி இந்தத் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடகாடு, […]
தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் எதிராகவும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தினகரன் ஆதரவாளர்கள் சேலத்தில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தனர். இதுதொடர்பாக கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் விநாயகம் அளித்த புகாரின் அடிப்படையில் தினகரன் ஆதரவாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடாசலம், பகுதி செயலாளர் சரவணன் உள்ளிட்ட 10 பேரை சேலம் அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர். துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததற்காக தினகரன் உட்பட அவரது ஆதரவாளர்கள் 30 பேர் மீது தேசதுரோகம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சேலம் […]
தமிழர்களுக்கு சிகிச்சை அளிக்க கேரளா மருத்துவமனைகள் மறுக்கின்றன. கேரள மருத்துவமனைகளில் தமிழருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. கடந்த மாதம் திருநெல்வேலியை சேர்ந்த முருகன் (30) என்பவர் கேரளாவில் கொல்லம் அருகே நடந்த விபத்தில் படுகாயம் அடைந்தார். அவருக்கு கொல்லம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது. சிகிச்சை கிடைக்காததால் அவர் உயிர் இழந்தார்.இந்த சம்பவத்திற்காக கேரளா இடது முன்னணி அரசின் முதல்வர் பகிரங்க மன்னிப்பும் தமிழர்களிடம் கேட்டார்.பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் […]
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பிஎஸ்எப் முகாமிற்குள் நுழைந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 3 வீரர்கள் காயமடைந்தனர். இந்திய வீரர்கள் திருப்பி தாக்கியதில் பயங்கரவாதி ஒருவன் சுட்டு கொல்லப்பட்டான். மோதல்: காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமான நிலையம் அருகேயுள்ள பிஎஸ்எப் முகாம் உள்ளது. பலத்த பாதுகாப்புள்ள இங்கு, நுழைந்த பயங்கரவாதிகள், கன ரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்த துவங்கினர். இதில் 4 வீரர்கள் காயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்த இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு பயங்கரவாதி […]
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் கீழமானங்கரை கிராமத்தில் அமரர் சின்னார் என்ற விவசாயி ஒரு புதிய நெல்ரகத்தை அதே கிராமத்தில் உள்ள புஷ்பம் என்பவர் உதவியுடன் உருவாக்கியுள்ளார். இந்த நெல் 110-115 நாட்கள் வயதுடையது. நெல் கத்தரி ஊதா கலரில், சாயாத நெல் வகையைச் சேர்ந்தது. புதிய நெல் ரகம் உருவான வரலாறு: 7 வருடங்களுக்கு முன்னர் புஷ்பம் என்ற விவசாயி முதுகுளத்தூர் பஞ்சாயத்து யூனியனில் எடிடி 36 என்ற நெல் ரக விதையை வாங்கிக் கொணர்ந்து […]
முசாபர்நகர்: விஜயதசமியை முன்னிட்டு உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் பகுதியில் கங்கை நதியில் புனித நீராட சாதுக்கள் மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயதசமியை முன்னிட்டு புனித நதிகளில் சாதுக்கள் நீராடுவர். உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் கங்கை நதி பகுதியில் பல ஆசிரமங்களைச் சேர்ந்த சாதுக்கள் நீராட மறுத்துவிட்டனர். அப்பகுதியில் கங்கை நதியில் தொழிற்சாலை கழிவுகள் கலந்து கருப்பு நிறமாக மாறியிருந்தது. இதனால் சாதுக்கள் கங்கையில் நீராட மறுத்தனர். தற்போது முசாபர்நகர் நிர்வாகம் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள தொடங்கியுள்ளது.
திருச்சி: திருச்சி மேலபுலிவார்டு ரோட்டை சேர்ந்த கவிதா(36).(பெயர் மாற்றம்) எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் உறவினர் தூத்துக்குடியை சேர்ந்த மாரியப்பன் (என்ற) கண்ணனை (45) அணுகியுள்ளார். சில பூஜைகள் செய்தால் தொழில் அபிவிருத்தி அடையும் என நம்பிக்கை தெரிவித்த மாரியப்பன், திருச்சிக்கு வந்து சில பூஜைகள் செய்துள்ளார். அதன்பின் மாரியப்பன் செய்து வந்த ‘ஷிப்பிங்’ தொழிலில் கவிதாவை பங்குதாரராக சேர்த்துக்கொள்வதாக கூறியுள்ளார். இதை நம்பிய கவிதா ரூ.5 லட்சத்தை மாரியப்பனிடம் வழங்கினார். தொழில் மேலும் […]
டெல்லி: மகாத்மா காந்தியின் பிறந்தநாளான இன்று டெல்லியில் உள்ள அவரின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி. நம் தேசப் பிதா மகாத்மா காந்தியின் 148வது பிறந்தநாள் இன்று. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்திற்கு இன்று காலை சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளான இன்று அவருக்கும் அஞ்சலி செலுத்தினார் மோடி. இது குறித்து அவர் ட்விட்டரில் […]
சேலம் : தமிழக அரசுக்கு எதிராக துண்டு பிசுரங்களை விநியோகித்ததாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார். தினகரானால் சேலம் மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் நியைக்கப்பட்டார். கைதான வெங்கடாசலத்திடம் துண்டறிக்கை குறித்து அன்னதானம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.