சென்னை: மருத்துவப் படிப்பில், மாநிலப் பாடத்தில் படித்த மாணவர்களுக்கான 85 சதவிகித இடஒதுக்கீடு அரசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்து தீர்ப்பளித்துள்ளது. ‘இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்’ என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மருத்துவ சேர்க்கைக்கு இந்தாண்டு மத்திய அரசு நீட் தேர்வை நாடு முழுவதும் நடத்தியது. இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதையும் மீறி, நீட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களில், 38 சதவிகித மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி […]
டார்ஜிலிங்: மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் அரசு அலுவலகத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். போராட்டக்காரர்கள் வன்முறையால் சுற்றுலா அலுவலகத்தில் இருந்த கணினிகள் எரிந்து நாசாமாகியுள்ளன. மேலும் வன்முறையால் டார்ஜிலிங்கில் பதற்றம் நிலவுகிறது
பந்திபோரா: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் ராணுவத்தினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் ஒன்றில் பதுங்கி இருந்த தீவிரவாதி ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் ராணுவ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுடில்லி : உலகில் அதிக சோம்பேறிகளை கொண்ட நாடுகள் குறித்து ஸ்டான்போர்ட் பல்கலை., சார்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. 46 நாடுகளைச் சேர்ந்த சுமார் 700,000 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.இப்பட்டியலில் இந்தியா 39 வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மக்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 4297 அடி மட்டுமே நடக்கிறார்கள். அதிகபட்சமாக சீனர்கள் நாள் ஒன்றிற்கு 6880 அடிகள் நடக்கிறார்கள். மிக குறைந்த அளவாக இந்தோனேசிய மக்கள் 3513 அடிகள் மட்டுமே நடக்கிறார்கள். அமெரிக்கர்கள் 4774 […]
டெல்லியில் 52 வயதான பெண் ஒருவர் அவரது இல்லத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். லக்ஷ்மி நகர் அருகே உள்ள இல்லத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : தனியார் பள்ளிகளுக்கான கட்டண முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. புதிய முறைகளுக்கான சட்ட திருத்த மசோதா சட்டசபையில் இன்று (ஜூலை 14) தாக்கல் செய்யப்பட உள்ளது.தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்களும், அதன் தொடர்ச்சியாக போராட்டங்களும் நடத்தப்பட்டதை அடுத்து 2009 ம் ஆண்டு, ஓய்வுபெற்ற நீதியரசர் கோவிந்தராஜன் தலைமையில் கட்டண நிர்ணய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் வழிகாட்டுதலின் பேரில் கட்டண நிர்ணயம் செய்ய புதிய […]
புதுடில்லி : தொழில் தொடங்க வசதியான மாநிலங்கள் பட்டியலில் ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் மாநிலங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. இந்தப் பட்டியலில் தமிழகம், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்கள் கடைசி மூன்று இடங்களில் உள்ளன. உரிமம் பெறும் நடைமுறைகள், சூழ்நிலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் தொழில் தொடங்க வசதியான மாநிலங்கள் பட்டியலை நிதி ஆயோக் முதன்மைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் வெளியிட்டார். இந்தப் பட்டியலில் ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் ஆகிய […]
கொல்கத்தா:மதக்கலவரத்தை தூண்டும் வகையில போலி தகவல்களை சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பி கலவரத்தை தூண்டிய பாஜக தகவல் தொழில் நுட்ப பிரிவின் ( ஐடி ) அமைப்பு செயலாளர் தருண் சென்குப்தா-வை இன்று மேற்கு வங்க காவலர்கள் கைது செய்தனர். பாஜக இந்தியாவில் மதகலவரத்தை தூண்டி அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை குறுக்குவழியில் கைப்பற்றும் யுத்தியை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக தற்போது மேற்கு வங்கத்தை குறிவைத்து செயல்படுகிறது. தனது வழக்கமான பாணியான போலியாக புகைப்படம், […]
டெல்லி : 2017…ம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் பணமதிப்பிழைப்பு நடவடிக்கையால் இந்தியாவில் 10.5 லட்சம் பேர் வேலை இழந்தனர் என்று இந்தியப் பொருளாதார நடவடிக்கைக் கண்காணிப்பு மையம் (CMIF) அறிவித்துள்ளது. இப்போது அறிமுகப்படுத்தியுள்ள GST காரணமாக குஜராத் மாநிலத்தில் மட்டும் 10.5லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்று மற்றொரு ஆய்வு கூறுகிறது.
அமெரிக்காவில் இருந்து வெளியாகும், ‘ஆப்டர் மிட்நைட்’ என்ற டிஜிட்டல் பத்திரிகையில், ‘2017ல் இந்தியாவின் அணு ஆயுத முயற்சிகள்’ என்ற பெயரில், அமெரிக்காவின் பிரபல அணு ஆயுத நிபுணர்கள் ஹான்ஸ் கிரிஸ்டென்சென், ராபர்ட் நோரிஸ் எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: அண்டை நாடான பாகிஸ்தானுடன் போர் அபாயம் ஏற்பட்டால், அதை சமாளிப்பதற்காக, இந்தியா தயாராகி வந்தது. அதே நேரத்தில், மற்றொரு அண்டை நாடான, சீனாவிடம் இருந்தும் எதிர்காலத்தில் அச்சுறுத்தல் வந்தால், அதை சமாளிப்பதற்கான அணு ஆயுதத் தயாரிப்பிலும், ஏற்கனவே உள்ள […]
புதுடெல்லி: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் கூட்டாக இணைந்து இன்று அனைத்து கட்சி கூட்டத்தை டெல்லியில் நடத்த உள்ளனர். சிக்கிம் மாநில எல்லையில், பூடானுக்கு சொந்தமான டோக்லாம் பகுதியில் சாலை அமைக்க முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய இராணுவ வீரர்கள் திருப்பி அனுப்பினர். இதனால், அங்கு இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விவாதிக்க இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு […]
திருவனந்தபுரம் : பிரபல நடிகர் கலாபவன் மணி கடந்த வருடம் மார்ச் 6ம் தேதி கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வைத்து மர்மமான முறையில் இறந்தார். இவரது மரணத்திலும் திலீப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவரது உடலில் விஷ சாராயத்தில் காணப்படும் மெத்தனால் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் வேதியியல் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டது. உடலில் பூச்சி கொல்லி மருந்தும் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரை யாராவது விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என […]
வாரணாசி: வாரணாசியில் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று நாட்களாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜிஎஸ்டி வரி விதிப்பால் துணிகளின் விலை உயரும் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இவ்வரியினால் ஏழை ,நடுத்தர வர்க்கத்தினர் , சிறு குறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் ..
கங்கை நதி மாசு படுவதை தடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயம், நதியிலிருந்து 500 மீட்டர் தூரம் வரை குப்பைகளை கொட்ட தடை செய்துள்ளது. பசுமை தீர்ப்பாயம் மத்திய அரசு, உத்திரபிரதேச அரசு, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உள்ள பல சுகாதார நிறுவனக்களுடன் கங்கை நதியை சுத்தம் படுத்தும் திட்டம் கலந்தாலோசித்த பின் தீர்ப்பு வழங்கியுள்ளது இதன் படி முதற்கட்டமாக கங்கைக் கரையில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்கு எந்த ஒரு அமைப்பும் இருக்கக் கூடாது என […]