திருச்சி மாவட்டம் புத்தூரில் உள்ளது மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனை இதன் அருகே வயலூர் சாலைப் பகுதியில் பேருந்து நிறுத்தம் ஒன்று உள்ளது. இந்நிலையில் நாள்தோறும் இங்கு சோமரசன்பேட்டை மற்றும் அல்லித்துறை ஆகிய பகுதிகளுக்குச் செல்ல ஏராளமான பயணிகள் பேருந்துக்காகக் காத்திருகின்ற நிலை உள்ளது.இதனால் பயணிகளின் சிரமத்தைப் போக்க வேண்டி பல்வேறு நடவடிக்கைகளை பல்வேறு அமைப்பினரும் எடுத்து வருகின்ற நிலையில், அந்தப் பகுதியில் கழிப்பறை ஒன்றை கட்டித்தர வேண்டும் என்று நெடுநாள்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.கோரிக்கையை ஏற்ற அரசும் அதற்கான பணிகளில் இறங்கி கட்டுமான பணிகள் முடித்தது.பயன்பாட்டிற்கு வருவதற்காக அன்மையில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அமைச்சர் வளர்மதி, திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு இந்த கட்டிடத்தை திறந்து வைத்தனர்.
கோரிக்கையை ஏற்று மக்களின் சிரமத்தை போக்கும் விதமாக கட்டிடத்தை கட்டி முடித்து திறந்து வைத்ததற்கு அப்பகுதி மக்கள் பாராட்டு கலந்த நன்றியை தெரிவித்தனர்.ஆனால் கட்டப்பட்ட கழிப்பறையின் பெயர் தமிழில் இல்லாமல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது மேலும் கழிப்பறையின் ஆண்களுக்கான வழியைச் சுட்டிக்காட்ட மகாகவி என்று போற்றப்படும் பாரதியாரின் படம் வைக்கப்பட்டுள்ளது.இதனால் அரசுக்கு பொதுமக்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்தோடு கட்டிடத்திற்கு தமிழில் பெயர் மற்றும் பாரதியின் புகைப்படத்தை நீக்க வேண்டும் என்று மக்களோடு பல்வேறு அமைப்பினரும் புகார் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…