தமிழகத்தில்,16 மாவட்டங்களில் மட்டுமே 316 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் மத்திய அரசு ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு பகுதிகள் குறித்த விவரங்களை அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து, தமிழகத்தில் கடந்த ஜூன் 5-ம் தேதி வரை கட்டுப்படுத்தப்பட்டு பகுதி குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் , தமிழகத்தில், 21 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை எனவும், 16 மாவட்டங்களில் மட்டுமே 316 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், தமிழக அரசு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட வாரியான விவரங்களை அரசாணையாக வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,நேற்று மட்டும் 1,562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில், கடந்த 9 நாட்களாக 1,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இதுவரை 33,229 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…