மின்சார வாரிய ஊழியர்கள் பிப்.1 ஆம் தேதி வேலை நிறுத்தம் அறிவிப்பு!

Published by
Edison

மின்சார சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை கண்டித்து தமிழக மின்சார வாரிய ஊழியர்கள் பேரணி மற்றும் வேலை நிறுத்தம் அறிவிப்பு.

மத்திய அரசானது,2003 ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்வதற்கான புதிய திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது.இதற்கான,உத்தேசித்திருக்கும் புதிய மின்சார சட்டத் திருத்தத்திற்கான வரைவு ஏற்கனவே கடந்த ஆண்டில் வெளியிடப்பட்டது.

ஆனால்,இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்,2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தம்,தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்குச் சாதகமாகவும், பொதுத்துறை நிறுவனங்களை பாதிக்கும் வகையிலும் இருப்பதோடு, மாநில அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளில் தலையிடுவதாகவும் உள்ளதால்,இந்தச் சட்டத் திருத்த முன்வடிவினை திரும்பப் பெறுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நேற்று (8-12-2021) கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில்,மின்சார சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை கண்டித்து தமிழக மின்சார வாரிய ஊழியர்கள்,பிப்ரவரி 1 ஆம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில்,டிசம்பர் 15 ஆம் தேதி டெல்லியை நோக்கி பேரணியும்,அதே நாளில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், சேப்பாக்கத்திலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

Recent Posts

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

9 hours ago

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…

9 hours ago

மகளிர் செஸ் உலக‌க் கோப்பை: மகுடம் சூடப்போவது யார்? முதல் போட்டி ட்ரா.., இரண்டாவது போட்டி தொடக்கம்.!

ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…

10 hours ago

திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!

திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…

10 hours ago

“ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும்” – பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…

11 hours ago

ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக விளங்கிய சோழர்கள்” – பிரதமர் மோடி புகழாரம்.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…

11 hours ago