வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் குடும்பத்தை கத்தியால் குத்திய நபர் கைது..!

Published by
பால முருகன்

சென்னை சூளைமேடு ராதாகிருஷ்ணன் நகர் 2வது தெருவில் வசித்து வருபவர் சந்திரமோகன். இவரது மகன் சதீஷ் சதிஷிற்கு சுகன்யா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும் வீட்டின் மாடியில் உள்ள வீட்டை வாடகைக்கு கொடுப்பதற்காக நாராயணன் என்பவர் இடம் வாடகைக்கு கொடுத்துள்ளார். மேலும் கடந்த சனிக்கிழமை நாராயணனிடம் வீட்டு வாடகை பணத்தை சதீஸ் கேட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாமல் இருந்த நாராயணனால் வாடகை பணம் செலுத்த முடியவில்லை. இதனால் இவருக்கும் சதிஷிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சத்தம் கேட்டு மாடிக்கு வந்த சுகன்யா மற்றும் சந்திரமோகன் வாடகை தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில்பெரிய கைகலப்பு ஆன காரணத்தால் தீஷ் மற்றும் அவரது உறவினர்கள் நாராயணனை தாக்க முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த நாராயணன் வீட்டிற்குள் சென்று கத்தியை எடுத்து வந்து சந்திரமோகன் மற்றும் அவரது மகன் மருமகளை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூன்று பேரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதில் சிகிச்சை பலனின்றி சுகன்யா பரிதாபமாக உயிரிழந்துள்ள்ளார். மேலும் சதீஷ் மற்றும் சந்திரமோகன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் நாராயணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Published by
பால முருகன்

Recent Posts

ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…

53 seconds ago

ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன? நள்ளிரவு பயங்கரவாதிகளின் தூக்கம் துளைத்த தரமான சம்பவம்.!

காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…

39 minutes ago

10 மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை.!

டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…

1 hour ago

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர் எதற்காக எப்படி நடத்தப்பட்டது? இந்திய ராணுவம் விளக்கம்!

டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…

4 hours ago