மண்டபத்தை இடித்ததால் ஏற்பட்ட விபத்தில் ஒரு பெண் பலி.! ஐந்து பெண்கள் படுகாயம்..!

Published by
பாலா கலியமூர்த்தி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் திருமண மண்டப கட்டிடம் இடிந்து விழுந்ததால் அருகே உள்ள குடியிருப்புகளில் வசித்த ஒரு பெண் பலி, ஐந்து பெண்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
சிவகாசி வள்ளலார் தெருவில் அரசன் கணேசன் என்ற தனியாருக்குச் சொந்தமான திருமண மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபத்தின் பின் பகுதியில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மண்டபத்தை புதுப்பிப்பதற்காக இடித்த போது அருகிலுள்ள குடியிருப்பின் மீது விழுந்ததால் விபத்து ஏற்பட்டது. இதில் பக்கத்தில் இருந்த வீடுகளின் மீதும் சாய்ந்தால் 55 வயதான கன்னியம்மாள் என்பவர் இடிபாட்டில் மாட்டிக்கொண்டு உயிர் இழந்தார். மற்றும் மண்டபத்துக்கு அருகே இருந்த சில வீடுகளும் சேதமடைந்தன. இதில் ஞான நாகம்மாள், அங்கம்மாள், சண்முகத்தாய், ஈஸ்வரி,நிஷா ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்த போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் காயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களில் நாகம்மாள் என்பவருக்கு இரு கால்களும் உடைந்து படுகாயம் அடைந்தாளால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். விபத்து நடந்த இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் தென்மண்டல டிஐஜி ஆனி விஜயா, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தென் மண்டல துணை இயக்குனர் சரவண குமார், ஆட்சியர் தினேஷ் குமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வுச் செய்தனர்.
விருதுநகர், சிவகாசி, சாத்தூர், வெம்பகொட்டை, மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

20 minutes ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

1 hour ago

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து – முதல்வர் மு.க ஸ்டாலின் நிவாரணத்தொகை அறிவிப்பு..!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…

2 hours ago

இளைஞர் அஜித்குமார் மரணம்: மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட்.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…

2 hours ago

இளைஞர் மரணம்: “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் ஸ்டாலின்.!

சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…

2 hours ago

நெஞ்சை உலுக்கும் காட்சி.., அஜித் குமாரை போலீசார் பிரம்பால் தாக்கிய வீடியோ.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…

3 hours ago