நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்பிற்கு பாடத்திட்டங்கள் அனைத்தும் மாற்றி அமைக்கப்பட்டு புதிய பாடத்திட்ட்ங்களை மாணவர்கள் பயின்று வருகின்றனர்.தற்போது ரிவிசன் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் 10 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ள நிலையில் இதற்கான மாதிரி வினாத்தாள்களை எல்லாம் பாடவாரியாக பள்ளிக் கல்வித்துறையால் வெளியிட்டது. ஆனால் அதில் கணித வினாத்தாளில் வடிவியல் பகுதியில் 2 கேள்விகளுக்கு பதிலாக 1 கேள்வியும், அதேபோல் கிராஃப்(Graph) பகுதியிலும் 2 கேள்விகளுக்கு பதிலாக 1 கேள்வி மட்டுமே இடம்பெற்றது.
இதனால் தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் மற்றும் ஆசியர்கள் குழம்பிய நிலையில் மாணவர்கள் மதிப்பெண் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று புகார்கள் குவிந்தது.இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அந்த அறிவிப்பில் அரையாண்டு வினாத்தாளை போலவே வடிவியல் மற்றும் கிராஃப் பகுதிகளில் தலா 2 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் தான் பொதுத்தேர்வில் இருக்கும் என்று தெளிவாக தெரிவித்துள்ளது.இதனால் மாணவர்கள் மற்றும் ஆசியர்கள் மத்தியில் நிலவி வந்த குழப்பத்தை பள்ளிக்கல்வித்துறை தீர்த்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…