திருப்பூரில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி- முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு!

Published by
Surya

திருப்பூரில் பணியின் போது லாரி மோதி உயிரிழந்த ஆயுதப்படை காவலர் பிரபுவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கவுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளதார்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம்-சென்னிமலை மாநில நெடுஞ்சாலையில் காங்கேயம் இடத்தில சோதனைச்சாவடியில் நேற்று நள்ளிரவில் கன்டெய்னர் லாரி ஒன்று நிற்காமல் சென்றது. அப்பொழுது காங்கேயம் அடுத்த, திட்டுப்பாறை சோதனைச்சாவடியில் அந்த லாரியை மடக்கிப் பிடிக்க அங்கிருந்த போலீசார் முயற்சித்தனர். அங்கும் அந்த லாரி நிற்காமல் சென்றது.

இதனால் போலீசார் சந்தேகமடைந்தனர். அப்பொழுது அங்கிருந்த ஆயுதப்படை காவலர் பிரபு என்பவர் லாரியை பிடிக்க இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்றுள்ளார். அப்போது அந்த லாரியை முந்திச் செல்ல முயன்ற போது இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குளானது. இதில் சம்பவ இடத்திலே காவலர் பிரபு உயிரிழந்தார்.

இந்நிலையில், திருப்பூரில் பணியின் போது லாரி மோதி உயிரிழந்த ஆயுதப்படை காவலர் பிரபுவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது. மேலும் தகுதியின் அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க முதல்வர் பழனிசாமி தெரிவித்து, அறிக்கை விடுத்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

3 hours ago

அண்ணா பெயரை உச்சரிக்க திமுகவுக்கு அருகதை இருக்கிறதா? – இபிஎஸ் கேள்வி

சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…

3 hours ago

கருப்புபெட்டி தரவுகள் மீட்பு! விரைவில் விமான விபத்துக்கான காரணம்!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…

4 hours ago

விஜய் இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? திருமாவளவன் கேள்வி!

சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…

5 hours ago

தோல்வியை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஷாக்? பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு?

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…

5 hours ago

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…

6 hours ago