நாம் தமிழர் கட்சி சார்பில் 10 லட்சம் பனை விதைகள் நடும் விழாவினை துவக்கி வைத்தார் சீமான்.
நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழகம் முழுவதிலும் இன்று ஒரே நாளில் 10 லட்சம் பனை விதைகளை நடுவதற்கு நாம் தமிழர் கட்சியினர் முடிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு இதே போல லட்சக்கணக்கில் பனவிதைகளை இவர்கள் நட்டு இருந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டும் அதன் தொடர்ச்சியாக பனை விதை நடும் நிகழ்வு நடந்து வருகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அம்பத்தூர் தொகுதியில் இன்று இந்த பனை விதை நடும் விழாவை முன்னின்று நடத்தி வைத்துள்ளார்.
மேலும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று ஒரே நாளில் 10 லட்சம் பண விதைகளை நடவு செய்து வரும் நாம் தமிழர் உறவுகளுக்கு வாழ்த்துக்கள். அம்பத்தூர் தொகுதியை சேர்ந்த சதாக்குளம் பகுதியில் நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனை விதை நடும் திருவிழாவை தொடங்கி வைத்ததகவும் தெரிவித்துள்ளார். மேலும் அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர் ரஜினி அண்மையில் வேறு ஒருவரை தான் முதல்வராக, வேட்பாளராக அறிவிப்பேன் என அவர் கூறியதற்கு, புகழ்ச்சியை மட்டுமே பார்த்து வந்த ரஜினியால் நாங்கள் சந்திக்க கூடிய அவச்சொற்களை சந்திக்க முடியாது எனவும், ரஜினி இவ்வாறு கூறியதிலிருந்து அவர் மீதான முரண் நீங்கி உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…