டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுதும் தேர்வு எழுத கூடாது என டிஎன்பிஎஸ்சி தடை விதித்து உள்ளது. இதைத் தொடர்ந்து எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக நேற்று காலை 2 வட்டாட்சியர்கள் , டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் என உட்பட 12 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர்.
இந்த 12 பேரிடமும் சிபிசிஐடி போலீசார் 3 தனிப்படை எஸ்.பிக்கள் அமைத்து தனித்தனியாக விசாரித்து வந்த நிலையில் நேற்று 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் இடைத்தரகர் எனவும் கூறப்படுகிறது.
நேற்று சிவகங்கையில் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்து மொத்தம் 10 பேரிடம் இன்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் 2 வட்டாட்சியர்கள் அடங்குவார்கள். நேற்று கைது செய்யப்பட்ட 3 பேரை சிபிசிஐடி போலீசார் எழும்பூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து பிப்ரவரி 07-ம் தேதி வரை அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை கடலூரில் ராஜசேகரன் என்ற இடைத்தரகரை கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…