BREAKING :டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக 10 பேரிடம் விசாரணை.!

Published by
murugan
  • 2 வட்டாட்சியர்கள் உட்பட 10 பேரிடம் இன்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • இன்று காலை கடலூரில் ராஜசேகரன் என்ற இடைத்தரகரை கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக  99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுதும் தேர்வு எழுத கூடாது என டிஎன்பிஎஸ்சி தடை விதித்து உள்ளது. இதைத் தொடர்ந்து எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக நேற்று காலை 2 வட்டாட்சியர்கள் , டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் என உட்பட 12 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர்.

இந்த 12 பேரிடமும் சிபிசிஐடி போலீசார் 3 தனிப்படை எஸ்.பிக்கள் அமைத்து தனித்தனியாக விசாரித்து வந்த நிலையில் நேற்று 3 பேரை  சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் இடைத்தரகர்  எனவும் கூறப்படுகிறது.

நேற்று சிவகங்கையில் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்து மொத்தம் 10 பேரிடம் இன்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் 2 வட்டாட்சியர்கள் அடங்குவார்கள். நேற்று கைது செய்யப்பட்ட 3 பேரை  சிபிசிஐடி போலீசார்  எழும்பூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து பிப்ரவரி 07-ம் தேதி வரை அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை கடலூரில் ராஜசேகரன் என்ற இடைத்தரகரை கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

Published by
murugan
Tags: #TNPSCCID

Recent Posts

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…

17 minutes ago

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

53 minutes ago

உயர்கிறதா ரயில்களின் டிக்கெட் கட்டணம்? இந்திய ரயில்வே எடுத்த முடிவு?

டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…

1 hour ago

நாங்க போர் ஒப்பந்தத்தை மீறி தாக்கவில்லை…இஸ்ரேல் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…

2 hours ago

“பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்தாரு”…ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்!

சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…

2 hours ago

போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!

இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…

2 hours ago