10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தில் மட்டும் 75 மதிப்பெண்ணுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பல மாநிலங்களில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டது. சில மாநிலங்களில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் 10,மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படாமல் இருந்த பொதுத்தேர்வு தமிழக அரசு ரத்து செய்தது. பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால் அனைத்து மாணவர்களுக்கும் காலாண்டு மற்றும் அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் பொதுத்தேர்வில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அரசு தேர்வுகள் இயக்கம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில், மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம், சமூகஅறிவியல் ஆகிய பாடங்களுக்கு 100 மதிப்பெண்கள் கணக்கிடப்படும் எனவும், அறிவியல் பாடத்தில் மட்டும் 75 மதிப்பெண்ணுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கிடப்படும் என அறிவித்துள்ளது.
மீதமுள்ள 25 மதிப்பெண்கள் அந்தந்த பள்ளியின் மூலம் செய்முறைத்தேர்வு(practical) மூலம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு கடந்த ஆண்டு காலாண்டு மற்றும் அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…