டோக்கன் தரும்போதே ரூ.1000 வழங்கப்படும் – முதல்வர் பழனிசாமி அதிரடி.!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் வீட்டில் முடங்கி இருப்பதால பல்வேறு சலுகைகள் அறிவித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே ஊரடங்கு உத்தரவால், மக்கள் யாரும் வேலைக்கு செல்ல இயலாததால் குடும்பத்திற்கு ரேஷன் பொருட்கள் உட்பட தலா ரூ.1000 வழங்கப்படும் என பல்வேறு சலுகைகள் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பணம் பெறுவதற்கு நியாயவிலை கடைகளில் கூட்டம் கூடுவதால் சமூக விலகல் பாதிக்கப்படும் என்று டோக்கன் வழங்கும் போதே கொரோனா நிவாரணத் தொகை 1000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் இந்த மாதம் இறுதி வரை ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் வெளியே சுற்றுவது அதிகரித்தால் 144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டார். தமிழக அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படாது என்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் அரசு சார்பில் செய்து தரப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நாளை மறுநாள் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

நாளை மறுநாள் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : நாளை மறுநாள் ஜூன் 7ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என்று…

6 minutes ago

”நட்பு ரீதியாக ராமதாஸை சந்தித்தேன், அன்புமணி வந்ததே எனக்கு தெரியாது” – ஆடிட்டர் குருமூர்த்தி.!

விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸை, அன்புமணி சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கும் இடையே கடந்த சில தினங்களாக மோதல் போக்கு…

13 minutes ago

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி.., அணியை அறிவித்தது இங்கிலாந்து.!

டெல்லி: ஐபிஎல் தொடர் முடிந்ததை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக சுப்மான் கில்…

52 minutes ago

#FactCheck : நாளை பொதுவிடுமுறை என பிரதமர் மோடி அறிவிப்பா? விளக்கம் கொடுத்த அரசு!

சென்னை : அடிக்கடி சமூக வலைத்தளங்களில் எதாவது வதந்தியான செய்திகள் பரவுகிறது என்றாலே அதனை சரிபார்த்து உண்மையா இல்லையா என அரசின்…

3 hours ago

“கோப்பையை தவறவிட்ட குற்றவாளி அவர் தான்”..ஸ்ரேயாஸ் ஐயரை திட்டிய யோகராஜ் சிங்!

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரைசென்று பஞ்சாப் அணி தோல்வி அடைந்தாலும் கூட அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை…

3 hours ago

நாயகனை மிஞ்சியதா “தக் லைஃப்”! நெட்டிசன்கள் சொல்லும் விமர்சனங்கள் என்ன?

சென்னை : நாயகன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணி தக்லைஃப் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கிட்டத்தட்ட 32 -வருடங்களுக்கு…

4 hours ago