சென்னை முழுவதும் பாதுகாப்பு பணியில் 10,000 போலீசார்..!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த வருடம் விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபாடு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், மக்கள் வீடுகளில் இருந்தே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அரசு வலியுறுத்தி உள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி, புதுப்பேட்டை, ஓட்டேரி உள்பட பிரச்சினைக்குரிய 70 இடங்களை போலீசார் அறிந்து அங்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டதுள்ளது.
விநாயகர் சிலையை கரைக்கும் இடங்களான எண்ணூர், திருவொற்றியூர், காசிமேடு துறைமுகம் ஆகிய இடங்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எந்த வித அசம்பாவிதம் நடக்காமல் இருக்க சென்னை முழுவதும் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
அமைப்பு ரீதியாகவோ, அதிக கூட்டமாக சேர்ந்து சிலைகளை கரைக்க முயன்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025