கவலை வேண்டாம் !இரண்டு மாதத்தில் 108 ஆம்புலன்ஸ் வரும் பாதை தெரியும் -அமைச்சர் விஜயபாஸ்கர்

108 ஆம்புலன்ஸ் வரும் பாதையை தெரியும் வகையில் 2 மாதத்தில் ‘செயலி’ அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது.அப்பொழுது பேரவையில்,திமுக சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பேசினார்.அவர் பேசுகையில்,108 ஆம்புலன்ஸ்களை அழைத்தால் வர 1 மணி நேரத்திற்கு மேலாகிறது என்று பேசினார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், சர்வதேச நாடுகளை விட தமிழகத்தில் விரைவாக ஆம்புலன்ஸ் வருகிறது.குறிப்பாக மாநகராட்சி பகுதிகளில் 8 நிமிடங்களுக்குள்ளும்,கிராம பகுதிகளில் 13 நிமிடங்களுக்கும்,மலைப் பகுதிகளுக்கு 13 நிமிடங்களில் வருகிறது என்று தெரிவித்தார்.இன்னும் இரண்டு மாதத்தில் ,ஆம்புலன்ஸை அழைத்தவுடன் வாகனம் வரும் பாதை ,ஓட்டுநரின் அலைபேசி எண் உள்ளிட்டவை தெரியும் வகையில் ‘செயலி’ அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”தமிழ்நாட்டில் NDA கூட்டணி ஆட்சி.., அதில் பாஜக அங்கம் வகிக்கும்” – அமித்ஷா மீண்டும் உறுதி.!
June 27, 2025
”உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து.., இப்போ எப்படி இருக்கு? – விருதுநகர் முன்னாள் ஆட்சியர் பதிவு.!
June 27, 2025