புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று( சனிக்கிழமை) மாலை சின்ன அடைக்கலம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சின்னப்பாண்டி மற்றும் அவரது மகன் மணிகண்டன், அந்தோணி ஆகிய மூன்று பேரும் இந்திய கடல் பகுதியில் நெடுந்தீவு என்ற பகுதிக்கு அருகே மீன் பிடித்தபோது அங்கு திடீரென வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்தாக கூறி அவர்களை படகுடன் கைது செய்தனர்.
இதையடுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் தமிழக கடற்கரையிலிருந்து சுமார் 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை இரு படகுகளுடன் சிறைபிடித்துச் சென்றனர். சிறைபிடித்த மொத்தம் 11 பேரிடமும் காங்கேசன்துறை கடற்படை தளத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இந்திய கடல்பகுதியில் 100க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள், மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…