11 மீனவர்கள் சிறைபிடிப்பு.! மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்த இலங்கை கடற்படை.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • புதுக்கோட்டை மீனவர்கள் இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது 11 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து, காங்கேசன்துறை கடற்படை தளத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று( சனிக்கிழமை) மாலை சின்ன அடைக்கலம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சின்னப்பாண்டி மற்றும் அவரது மகன் மணிகண்டன், அந்தோணி ஆகிய மூன்று பேரும் இந்திய கடல் பகுதியில் நெடுந்தீவு என்ற பகுதிக்கு அருகே மீன் பிடித்தபோது அங்கு திடீரென வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்தாக கூறி அவர்களை படகுடன் கைது செய்தனர்.

இதையடுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் தமிழக கடற்கரையிலிருந்து சுமார் 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை இரு படகுகளுடன் சிறைபிடித்துச் சென்றனர். சிறைபிடித்த மொத்தம் 11 பேரிடமும் காங்கேசன்துறை கடற்படை தளத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இந்திய கடல்பகுதியில் 100க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள், மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

8 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

8 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

9 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

10 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

10 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

11 hours ago