புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று( சனிக்கிழமை) மாலை சின்ன அடைக்கலம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சின்னப்பாண்டி மற்றும் அவரது மகன் மணிகண்டன், அந்தோணி ஆகிய மூன்று பேரும் இந்திய கடல் பகுதியில் நெடுந்தீவு என்ற பகுதிக்கு அருகே மீன் பிடித்தபோது அங்கு திடீரென வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்தாக கூறி அவர்களை படகுடன் கைது செய்தனர்.
இதையடுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் தமிழக கடற்கரையிலிருந்து சுமார் 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை இரு படகுகளுடன் சிறைபிடித்துச் சென்றனர். சிறைபிடித்த மொத்தம் 11 பேரிடமும் காங்கேசன்துறை கடற்படை தளத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இந்திய கடல்பகுதியில் 100க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள், மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…