திருச்செந்தூர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1,27 கோடி..!

Published by
murugan

திருச்செந்தூர் சுப்ரமணியர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் அக்டோபர் மாதத்திற்கான உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த கோவில் இணை ஆணையர் அம்ரித் தலைமை வகித்தார். உதவி ஆணையர் செல்வராஜ் , ரோஜோலி சுமதா , தக்கார் பிரதிநிதி பாலசுப்ரமணிய ஆதித்தன் முன்னிலை வகித்தனர். பொதுமக்கள் சார்பில் மோகன் ,வேலாண்டி , கருப்பன் ஆகியோர் இருந்தனர்.
உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் பீடம் குருகுலம் வேதபாடசாலை உழவாரப்பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில் உண்டியலில் இருந்து ஒரு கோடியே 25 லட்சத்து 48 ஆயிரத்து 321 ரூபாயும், மேலக்கோபுர திருப்பணி உண்டியலில் இருந்து  ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 538 ரூபாயும் இருந்தது.
மொத்தமாக ஒரு கோடியே 27 லட்சத்து 859 ரூபாய்  வசூலானது.இதில் வெளிநாட்டு நோட்டுகள் 252 , தங்கம் 780 கிராம் , வெள்ளி 16 ஆயிரத்து 700 கிராம் ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

Published by
murugan

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

11 minutes ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

14 minutes ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

1 hour ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

2 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

3 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

3 hours ago