காதலனை சந்திக்க செண்டருக்கு உதவுவதாக கூறிய பலாத்காரம் செய்த மூவர் கைது.
கோழிக்கோடு முக்கம் பகுதியை சேர்ந்த 13 வயதே ஆகக்கூடிய எட்டாம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவருக்கு ஃபேஸ்புக் மூலமாக கிருஷ்ணகிரியை சேர்ந்த 22 வயதுடைய தரணி என்பவர் பழக்கம் ஆகி உள்ளார், நாளடைவில் இது காதலாக மாற கிருஷ்ணகிரி சென்று தனது காதலனை பார்க்க விரும்பியுள்ளார் மாணவி. இந்நிலையில் மாணவிக்கு ஏற்கனவே அறிமுகமான கோழிக்கோடை சேர்ந்த விபின் ராஜ் என்பவரிடம் இது குறித்து கூறும் பொழுது, அவர் இதற்கு உதவி செய்வதாக காரில் அழைத்துச் செல்கிறேன் எனக் கூறி தனது நண்பர்கள் அகித் ராஜ் மற்றும் ஜோபின் ஆகிய இருவரையும் கூட்டிக்கொண்டு மாணவியுடன் காரில் சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே அவர்கள் காரை நிறுத்திவிட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அதன் பின் ஓசூர் பஸ் நிலையம் அருகே மாணவியை இறக்கிவிட்டு சென்றுவிட்ட நிலையில், மாணவி தனது காதலனுக்கு தொலைபேசி மூலமாக தகவல் கொடுத்ததை அடுத்து தரணி அந்த மாணவியை தன் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் தனது மகளை காணவில்லை என மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவரது செல்போன் நம்பரை வைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர், மாணவி கிருஷ்ணகிரியில் இருப்பது தெரியவந்துள்ளது. தரணியின் வீட்டுக்கு சென்று மாணவியை மீட்டு உள்ளனர். பின்பு, மாணவி அளித்த புகாரின் பேரில் விபின் ராஜ், அகித் ராஜ் மற்றும் ஜோபின் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ததுடன், மாணவியின் காதலன் மீது மைனர் பெண்ணை கடத்தியதாக வழக்கு போடப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…