தமிழகம் முழுவதும் நாளை முதல் 14,757 தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
நாடு முழுவதும் வருகின்ற 14-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால், பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்குச்செல்லும் வசதிக்காக தமிழகம் முழுவதும் 14,757 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாக தமிழகத்தில் தற்போது குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் நாளை முதல் 3 நாட்களுக்கு இயக்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மொத்தமாக இயக்கப்படும் 14,757 பேருந்துகளில் சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு 9,510 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகள் 11-ஆம் தேதி அதாவது நாளை 2,225 பேருந்துகளும், 12-ஆம் தேதி 3,705 பேருந்துகளும், 13-ஆம் தேதி 3,580 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மற்ற மாவட்டங்களுக்கு 5,247 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள ஐந்து சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக, கூடுதலாக 310 சிறப்பு இணை பேருந்துகள் 3 நாட்களுக்கு இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. தனது சொந்த…
திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் (101) கடந்த ஜூலை 21ம்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு, 'இராசேந்திர சோழன் உருவாக்கிய அரியலூர் சோழகங்கம்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இரண்டு…
சென்னை : தமிழ்நாடு தனிநபர் வருமானத்தில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இது…
சென்னை : நடிகர் சூர்யா பிறந்தநாளை ஒட்டி சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ‘கருப்பு’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. சூர்யாவின்…