அண்ணா பெயரில் PhD மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 16,000 நிறுத்தப்படுகிறது என வெளியாகிய செய்திக்கு அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்.
அண்ணா அவர்களின் பெயரில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு 16,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது, இனி இது நிறுத்தப்படும் செய்திகள் பரவி வந்தது. இந்நிலையில் ஜனவரி மாதம் முதல் இந்த உதவித் தொகை நிறுத்தப்படும் என வெளியாகிய செய்திக்கு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர உதவித்தொகை நிறுத்தப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை வழங்கப்பட்டு வந்த 16,000 ரூபாய்க்கு பதிலாக 20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 4000 ரூபாய் கூடுதலாக கிடைக்குமே தவிர, நிறுத்தப்பாவில்லை. ஆனால், ஆராய்ச்சி மாணவர்களின் ஆராய்ச்சி சார்ந்த இதர செலவினங்களுக்காக ஆண்டொன்றுக்கு வழங்கப்பட்டு வந்த 25 ஆயிரம் ரூபாய்தான் நிறுத்தப்பட்டு உள்ளது என கூறப்பட்டுள்ளது. உதவி தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இதர செலவினங்களுக்கான வழங்கப்பட்டு வந்த தொகை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…