திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 17 வயது சிறுமி, விஷமருந்தி தற்கொலை செய்துள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கவரப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோர்களுடன் வசித்து வந்தார். அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக புதுக்கோட்டை மாவட்டம், பகவன்பட்டியை சேர்ந்த ராம்கி என்பவர், ஆசை வார்த்தை கூறி, நெருங்கி பழகி, அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அந்த சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது அந்த பெண்ணின் வீட்டில் ராம்கியுடன் திருமணம் செய்து வைப்பதாக முடுவெடுத்தனர். ஆனால், கர்ப்பமடைந்த அந்த சிறுமியை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என ராம்கியின் பெற்றோர் கூறி வந்தனர். அதுமட்டுமின்றி, அந்த சிறுமியின் பெற்றோரிடம் தரக்குறைவாக பேசினார்கள்.
இதனால் அந்த சிறுமி, தனது பெற்றோர்களுடன் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ராம்கி என்ற இளைஞரை மணப்பாறை மகளிர் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட அந்த இளைஞர் மீது புகாரளித்தார். புகாரின் பேரில், போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
புகாரளித்து நீண்ட காலங்கள் ஆகியும், ராம்கியை கைது செய்யாத காரணத்தினால், அந்த சிறுமி விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்பொழுது சிறுமியை மீட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், தற்கொலைக்கு முயற்சி செய்த அந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த பகவன்பட்டியை சேர்ந்த ராம்கி என்பவர், மணப்பாறை அணைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…