ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2.63 லட்சம் இருப்பதாக வெளியான வெள்ளை அறிக்கை…! கடனை செலுத்த காசோலையுடன் சென்ற நபர்…!

Published by
லீனா

வெள்ளை அறிக்கையில் வெளியிட்டபடி, தனது குடும்பத்தின் மீதுள்ள கடன்தொகையை வழங்க கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு காசோலையுடன் வந்த நபர்.

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், நேற்று காலை 11:30 மணியளவில் தலைமை செயலகத்தில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இவர் வெள்ளை அறிக்கையை வெளியிட்டு, இது தொடர்பான விளக்கத்தையும் அளித்துள்ளார்.

இந்நிலையில், இந்த அறிக்கையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,63,976 கடன் சுமத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த காந்தியவாதியான ரமேஷ் தியாகராஜன் என்பவர், காந்தி வேடம் அணிந்து தனது குடும்பத்தின் மீதுள்ள கடனை செலுத்துவதற்காக காசோலையுடன் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவத்திற்கு வந்தார்.

ஆனால், கோட்டாட்சியர் கோட்டை குமார், அவரின் காசோலையை வாங்க மறுத்துவிட்டார். இதனையடுத்து அவர் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றார். ஆட்சியரும் அந்த காசோலையை வாங்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் இதுகுறித்து அவர் கூறுகையில், ஒவ்வொருவரும் அந்தந்த குடும்பத்திற்கான கடன் தொகையை கட்ட முன்வர வேண்டும். எனது குடுமத்திற்கான கடனாக நிலுவையில் உள்ள பதிவேட்டில் நகலையும் தரவேண்டும். இந்த கடனை செலுத்த முன்வரும் வசதியற்ற குடும்பங்களுக்கு ரூ.15 லட்சம் கடனாக கொடுத்து, குடும்பமாக சேர்ந்து சுயதொழில் செய்து நாட்டின் பொருளாதாரத்தையும், தனி நபருடைய வருமானத்தையும் மேம்படுத்த உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…

5 hours ago

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…

5 hours ago

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…

6 hours ago

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

7 hours ago

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

7 hours ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

7 hours ago