திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சிக்னல் கோளாறை சரி செய்து விட்டு ஸ்டேஷனுக்கு திரும்பிய 2 ரயில்வே ஊழியர்கள் மீதி சரக்கு ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர்.
ஆம்பூரை அடுத்த பச்சக்குப்பம் பகுதியில் உள்ள பெங்களூர்-சென்னை வழித்தடத்தில் கனமழை காரணமாக சிக்னல் கோளாறு ஏற்பட்டு உள்ளது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த பிரச்சனையை சரி செய்ய, ரயில்வே பொறியாளர் முருகேசன் மற்றும் பீகார் மாநில டெக்னீசியன் பர்வேஸ் குமார் ஆகிய இருவரும் கொட்டும் மழையில் சென்று சிக்னல் பிரச்சனையை சரி செய்துள்ளனர்.
பிரச்னையை சீராக்கியவுடன் ஸ்டேஷனுக்கு திரும்பிய இருவரும் ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளனர். அப்போது, சரக்கு ரயில் ஒன்று ஜோலார்பேட்டையில் இருந்து ரேணிகுண்டா நோக்கி சென்றுள்ளது. கனமழை காரணமாக ரயில் வருவதை அறியாத இருவரும் சரக்கு ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…