தேசிய நல்லாசிரியர் விருதிற்காக தேசிய அளவில் 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு விருது வழங்கப்படவுள்ளது.
ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக பல நற்பணிகளை செய்தவர் ராதாகிருஷ்ணன். அவரது பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் அந்த தினத்தன்று ஆசிரியர் பணியில் சிறந்து விளங்குபவர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கி சிறப்பிப்பது வழக்கம். அந்த வகையில் தேசிய அளவில் இந்தாண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்காக 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இரண்டு மாற்று திறனாளி ஆசிரியர்களும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கான சிறப்பு பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.
ஆம் விழுப்புரத்தில் செஞ்சிக்கு அருகிலுள்ள சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் திலீப் என்பவருக்கும், சென்னையில் அசோக் நகரில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் சரஸ்வதிக்கும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படவுள்ளது.
விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் டெல்லி விக்யான் பவனில் வைத்து செப்டம்பர் 5-ம் தேதி விருதினை வழங்குவார்.
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…