2 வயது குழந்தையின் மீது தனியார் பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • நெல்லை மாவட்டத்தில் 2 வயதுடைய குழந்தை தெருவில் விளையாடிய போது அந்த வழியாக வந்த தனியார் வேன் அந்த குழந்தையின் மீது மோதியதில் சிகிச்சைக்கு சென்ற வழியிலேயே உயிரிழப்பு.
  • இதுதொடர்பாக குழந்ந்தையின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் அந்த வேன் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பெட்டைக்குளம் யாதவர் தெரிவை சேர்த்தவர் சுரேஷ் என்பவரின் மகன் 2 வயதுடைய மகேஷ் என்ற குழந்தை தெருவில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த தனியார் பள்ளி வேன், அந்த குழந்தையின் மீது மோதியதாக கூறப்படுகிறது. பின்னர் இதனை பார்த்த உறவினர்கள் மற்றும் அருகில் இருப்பவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த குழந்தையை உடனடியாக உறவினர்கள் மீட்டு நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

இந்நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை மகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குழந்தையின் தாயார் இசக்கியம்மாள் திசையன்விளை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்ட்டர் ஜீடி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இட்டமொழியை சேர்ந்த வேன் டிரைவர் 20 வயதுடைய செல்வின் என்பவரை கைது செய்தனர். பின்னர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

15 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

15 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

16 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

16 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

17 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

18 hours ago