2 ஆண்டு ஆட்சி… மக்களின் மனதில் மகிழ்ச்சி; முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி.!

Published by
Muthu Kumar

தமிழக அரசின் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி இரண்டு ஆண்டு சாதனை மலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

தமிழக அரசு கடந்த இரன்டு ஆண்டில் திமுக ஆட்சியின் கீழ் அடைந்த சாதனைகளை விளக்கும் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி என்ற தமிழக அரசின் சாதனை மலர், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார், தமிழக அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கும் காணொளி தொகுப்பினையும் முதல்வர் வெளியிட்டார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் தமிழக அரசின் சாதனை மலரை வெளியிட்ட பின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நமது திராவிட ஆட்சி என்பது சமூக நீதி, சம நீதி, சகோதரத்துவம், சுயமரியாதை, சமதர்மம் நிறைந்தது. அனைத்து மக்களும் நலன் பெரும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

அரசுப்பள்ளியில் பயின்று கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய், மகளிருக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நான் முதல்வன் திட்டம் என ஒவ்வொருவருக்கும் நமது அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

மேலும் ஆட்சிக்குவந்து இரண்டு ஆண்டுகளில் 6,905 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன், 16 மாவட்டங்களில் கள ஆய்விற்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து அதனை நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்தார். நமது ஆட்சியின் மூலம் மக்கள் மகிழ்ச்சியடைந்து வருகிறார்கள், மக்களின் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி என்று கூறினார்.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அயராது உழைப்பேன், என்றும் உங்களில் ஒருவனாகவும், உங்களோடு ஒருவனாகவும் இருந்து பாடுபடுவேன் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.

Published by
Muthu Kumar

Recent Posts

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

1 hour ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

2 hours ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

2 hours ago

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

2 hours ago

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

3 hours ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

3 hours ago