மதுரை ரயில் தீ விபத்து தொடர்பாக 20 பேரிடம் விசாரணை – தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர்

Published by
பாலா கலியமூர்த்தி

மதுரை ரயில் தீ விபத்து தொடர்பாக 20 நபர்களிடம் விசாரணை நடைபெறுகிறது என்று தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.செளத்ரி தெரிவித்துள்ளார். மதுரை அருகே சுற்றுலா ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டு, 9 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.செளத்ரி விசாரணை மேற்கொண்டு வருகிறார். இன்று ரயில் பேட்டி தீவிபத்து ஏற்பட்ட இடத்திற்கு நேரில் சென்று இரண்டாவது நாள் விசாரணை மற்றும் ஆய்வு மேற்கொண்டார்.

இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ரயில் தீவிபத்து தொடர்பாக தற்போது வரை 20 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் ஏன் முறையாக பரிசோதனை செய்யவில்லை என்பது குறித்தும் விசாரணை நடைபெறுவதாகவும், சிலிண்டர்தான் தீ விபத்திற்கு பிரதான காரணமாக இருந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.

இதனிடையே, மதுரை ரயில் பெட்டி தீ விபத்து தொடர்பாக லக்னோவில் உள்ள பேசின் டிராவல்ஸ் ஊழியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அதன்படி, டிராவல்ஸ் நிறுவன ஒருங்கிணைப்பாளர், சமையல் பணியாளர், உதவியாளர், சுற்றுலா வழிகாட்டி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

2 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

2 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

2 hours ago

அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் கடிதம்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…

2 hours ago

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…

4 hours ago

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…

4 hours ago