அமெரிக்கவில் உள்ள ஒரு உளவு நிறுவனம் ஆபாச படங்கள் பார்ப்பவர்களின் பட்டியலை வெளியிட்டது.அந்த பட்டியலில் இந்தியா தான் அதிக அளவு ஆபாச படங்கள் பார்ப்பதாக கூறப்பட்டது.
பின்னர் அந்த பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகம் அந்த பட்டியலை தமிழக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு ஏடிஜிபி அனுப்பி இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி கூறினர்.
அந்த பட்டியலை வைத்து கொண்டு தமிழகத்தில் யார் யார் சிறார் ஆபாச படங்களை பார்க்கிறார்களோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் இந்த பட்டியல் அனுப்பப்பட்டது. முதற் கட்டமாக திருச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதே போன்று நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தமிழக காவல் துறை அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.
சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தாலோ காவல்துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கும்படி காவல் துறை கூறியிருந்தனர். இந்நிலையில் கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் பேரில் சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த 72 வயதான மோகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மோகனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…