கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்குதொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டம் தலைவா் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 500-க்கும் மேற்ப்பட்ட உறுப்பினா்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்தி சமஸ்கிருதம் மொழிகளை திணிக்க முயற்சிக்கும் பாஜக அரசுக்கு வன்மையாக கண்டனம், பொள்ளாட்சி வழக்கின் விசாரணை விரைந்து நடத்தப்பட வேண்டும், இறந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை.
கிராம சபை கூட்டம் நடத்தப்படாமல் இருப்பதை கண்டித்தும், எட்டு வழி சாலை போன்ற விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நிலைப்பாடு பற்றி முடிவு எடுக்க கமலஹாசனுக்கு பொதுக்குழு அதிகாரம். தேர்தல் கூட்டணி, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் வென்று கமலை முதல்வராக பொறுப்பேற்க செய்வதே ஒவ்வொருவரின் கடமையாகும் என பொதுக்குழு தீர்மான நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவராக செயல்படவும் பொதுக்குழு அதிகாரம் அளித்துள்ளது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…