தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. அப்போது கால்நடைத்துறை மானியக் கோரிக்கையில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் உதய சூரியன், இலவச கோழி வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கும் கோழிகள் குஞ்சு பொரிப்பது இல்லை என்றும் கோழிக் குஞ்சுகள் வளர்க்க வழங்கப்படும் கூண்டுகள் சிறியதாக உள்ளது என குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இலவச கோழி வளர்ப்புத் திட்டத்தில் ஒரு நபருக்கு 25 கோழிகள் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
அதில் 15 பெட்டை கோழிகளும், 10 சேவல்களும் வழங்கப்படுவதாக கூறினார். பின்னர் தனது வீட்டில் வளர்க்கப்படும் 2 கோழிகள் தலா 14 முட்டைகளை இட்டு 28 குஞ்சுகள் பொரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் கோழி வளர்ப்புத் திட்டத்தில் வழங்கப்படும் கோழிகள் அனைத்தும் நல்ல கோழிகள் என்றும் பயனாளிகள் பயன் அடைய வேண்டும் என்பதற்காகத்தான் கோழிக் குஞ்சுகள் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது எனவும் முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…