தூத்துக்குடியில் நண்பனை உயிரோடு புதைத்த முயன்ற 3 பேர் கைது.
தூத்துக்குடி மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த அஜித்குமார் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவர் தன் நண்பர்களான தேவ் ஆசீர்வாதம், தர்ம முனிசாமி, இசக்கி மணி ஆகியோருடன், ஒன்றாக மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்த நிலையில்,தேவ் ஆசீர்வாதம் செல்போன் வாங்குவதற்காக .ரூ.5,000 கடன் வாங்கியுள்ளார். முத்தையாபுரம் காட்டுப்பகுதியில், அந்த பணத்தில் நண்பர்கள் 4 பேரும் மது அருந்தியுள்ளனர். இதனையடுத்து, அஜித்குமார் தன கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது, அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில், கத்தி மற்றும் கம்பியால் அஜித்குமாரை தாக்கிய நண்பர்கள், மதுபோதை தலைக்கேறிய நிலையில், அஜித்குமாரை உயிரோடு புதைக்கவும் முயற்சித்துள்ளனர். அஜித்குமாரின் மார்பளவு மணலை மூடிய நிலையில், அஜித்குமாரின் அலறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் அவரை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தேவ் ஆசீர்வாதம், தர்ம முனிசாமி, இசக்கி மணி ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர்.
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…