குழந்தையை கடத்தி வைத்து பெற்றோரிடம் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆர். கே. பேட்டையை சேர்ந்தவர் முபாரக். இவரது 3 வயது குழந்தை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளார். அதனையடுத்து குழந்தையை தான் கடத்தி வைத்திருப்பதாகவும், ஒரு கோடி பணம் தந்தால் குழந்தையை திருப்பி தருவதாகவும் கூறி ஒருவர் முபராக்கின் மொபைல் எண்ணிற்கு அழைப்பு விடுத்து கூறியுள்ளார்.
உடனடியாக ஆர். கே. பேட்டையில் உள்ள போலீஸ் நிலையத்தில் முபாரக் புகார் செய்துள்ளார். இதனிடையே குழந்தையை வங்கனூர் கூட்டுச் சாலையில் விட்டு விட்டு கடத்தியவன் அவ்விடத்தை விட்டு செல்ல, போலீசாரும் குழந்தையை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். அதனையடுத்து நடந்த விசாரணையில் குழந்தையை கடத்தியவர் அதே பகுதியை சேர்ந்த முபாரக் அவர்களின் உறவினரான கலைமான் என்று தெரிய வந்தது. அதனையடுத்து குழந்தை கடத்தி மிரட்டிய கலைமானை போலீசார் கைது செய்தனர்.
கொல்கத்தா : ஏர் இந்தியா விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டு வருவதால் பயணிகள் மிகவும் அதிர்ச்சியடைந்து இனிமேல் விமானத்தில்…
இஸ்ரேல் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட்…
சென்னை : வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
இஸ்ரேல் : ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு…
சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…
புதுச்சேரி : குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 3 நாள் பயணமாக நேற்றைய தினம் புதுச்சேரி சென்றார். இன்று…