இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை திட்டம்… தொடக்கிவைத்தார் தமிழக முதல்வர்….

Published by
Kaliraj

இளம் வழக்கறிஞர்களுக்கு பொருளாதார ரீதியில் உதவிடும் நோக்கில், 2 ஆண்டு காலத்திற்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் தமிழக முதல்வர்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,  சட்டப்படிப்பினை முடித்து கல்லூரியில் இருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள், பார் கவுன்சிலில் நிரந்தர பதிவு சான்றிதழ் பெறுவதற்கு முதலில் தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் குழும தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் பின்னர், இளநிலை வழக்கறிஞர்களாக, மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் 2 அல்லது 3 ஆண்டுகாலம் பயிற்சி பெற வேண்டும்.
கிராமப்புற மற்றும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து சட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள், சட்டப் படிப்பினை முடித்து விட்டு அவர்கள் வழக்கறிஞர்களாக பணியாற்றுவதற்கு குறைந்தபட்சம் 3 அல்லது 4 ஆண்டுகள் தேவைப்படுகிறது. இக்காலக்கட்டத்தில் பல வழக்கறிஞர்கள் மிகவும் வறுமையான நிலையில் உள்ளதோடு, ஒரு சிலர் தங்களை வழக்கறிஞர்களாக நிலைநிறுத்திக் கொள்ள இயலாமல் வேறு மாற்றுத் தொழிலுக்கு சென்று விடும் நிலையும் உள்ளது. இந்நிலையினை கருத்தில் கொண்டு, வறுமையான நிலையில் உள்ள இளம்

வழக்கறிஞர்களுக்கு உதவிடும் வகையில், தகுதிகளின் அடிப்படையில் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் வீதம் 2 ஆண்டு காலத்திற்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று கடந்த  ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதன்படி, இந்த  திட்டத்தை முதல்வர் நேற்று 9 இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகைக்கான ஆணையினை வழங்கி துவக்கி வைத்தார்.

Published by
Kaliraj

Recent Posts

தேசிய அளவில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம்…புகழ்ந்து தள்ளிய துறைமுக ஆணையம்!

தேசிய அளவில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம்…புகழ்ந்து தள்ளிய துறைமுக ஆணையம்!

தூத்துக்குடி : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் (வ.உ.சி) துறைமுகம், 2024-25 நிதியாண்டில் 50 மில்லியன் டன் சரக்குகளையும், 1…

8 minutes ago

ஜனநாயகன் ஷூட்டிங் ஓவர்…இன்று முதல் முழு நேர அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் விஜய்?

சென்னை : நடிகர் விஜய் த.வெ.க கட்சியை தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் அதற்கான வேலைகளில் அவரும்…

2 hours ago

மிஸ் பண்ணாதீங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

சென்னை : தமிழ்நாடு அரசு 2023-ஆம் ஆண்டு முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை (கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்)…

3 hours ago

35 லட்ச ரூபாய் முறைகேடு…? “தினேஷ் மாஸ்டர் பதவி விலகனும்”..கொந்தளித்த சங்க உறுப்பினர்கள்!

சென்னை : தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது என்னவென்றால், நடன இயக்குனர்கள் சங்கத்தின்…

4 hours ago

“தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்” முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை : தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவராகவும் பணியாற்றிய கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்த…

4 hours ago

நார்வே செஸ் தொடர் : அர்ஜுன் எரிகைசியை வீழ்த்திய குகேஷ்!

நார்வே : செஸ் 2025-ல இந்திய வீரர் டி. குகேஷ், உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை…

5 hours ago