சென்னையில் விசிக பிரமுகர் வெட்டிக் கொலை – 4 பேர் கைது.!

Published by
பாலா கலியமூர்த்தி

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கேசவன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த விசிக பிரமுகரான கேசவன் என்பவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை 10 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை கேசவனை மீட்டு சென்னை ஸ்டாலின் மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே அதே பகுதியை சேர்ந்த மதன் என்பவர் அனுமதியின்றி மது விற்பனை செய்து வந்ததாகவும், இதுகுறித்து போலீசுக்கு கேசவன் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இத்துடன் அவர்களிடையே முன்விரோதம் இருந்து வந்த நிலையில், தற்போது இந்த கொலை நடந்துள்ளதால் மதன் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் கேசவன் உறவினர்கள் மதனின் வீட்டை அடித்து நொறுக்கினர். இதன் காரணமாக அப்பகுதியில் அதிகப்படியாக காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது கேசவன் கொலை வழக்கில் 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…

5 hours ago

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

6 hours ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

7 hours ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

8 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

8 hours ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

9 hours ago