சென்னையில் விசிக பிரமுகர் வெட்டிக் கொலை – 4 பேர் கைது.!

Published by
பாலா கலியமூர்த்தி

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கேசவன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த விசிக பிரமுகரான கேசவன் என்பவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை 10 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை கேசவனை மீட்டு சென்னை ஸ்டாலின் மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே அதே பகுதியை சேர்ந்த மதன் என்பவர் அனுமதியின்றி மது விற்பனை செய்து வந்ததாகவும், இதுகுறித்து போலீசுக்கு கேசவன் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இத்துடன் அவர்களிடையே முன்விரோதம் இருந்து வந்த நிலையில், தற்போது இந்த கொலை நடந்துள்ளதால் மதன் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் கேசவன் உறவினர்கள் மதனின் வீட்டை அடித்து நொறுக்கினர். இதன் காரணமாக அப்பகுதியில் அதிகப்படியாக காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது கேசவன் கொலை வழக்கில் 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

2 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

3 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

5 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

5 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

6 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

7 hours ago