சென்னை ,மதுரை , கோவை உள்ளிட்ட மாநகரங்களில் 4 நாட்கள் முழுமையான ஊரடங்கு என அறிவித்தது முன்யோசனையற்ற நிர்வாகத்தை காட்டுகிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,885 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள முதல்கட்ட நடவடிக்கையாக மத்திய அரசு அறிவித்த 40 நாள் ஊரடங்கை மதித்து, பொதுமக்கள் வீட்டுக்குள் இருந்து வருகிறார்கள். இந்நிலையில், சென்னை ,மதுரை , கோவை உள்ளிட்ட மாநகரங்களில் 4 நாட்கள் முழுமையான ஊரடங்கு என எவ்வித முன் அறிவிப்புகளுமின்றி முதல்வர் பழனிசாமி அறிவித்தது முன்யோசனையற்ற நிர்வாகத்தை காட்டுகிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் , முதல்வரின் முன்யோசனையற்ற அறிவிப்பால் மக்கள் பதற்றமடைந்து கடைகளில் குவிந்துவிட்டனர். இதனால்,ஊரடங்கு நோக்கமே சிதைந்து சின்னாபின்னமாகிவிட்டது என ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…