அதிமுக ஆட்சியில் 4 லட்சம் தடுப்பூசிகள் வீண் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published by
murugan

அதிமுக ஆட்சியில் 4 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார்.

சமீபத்தில் பாஜக தலைவர் முருகன் தடுப்பூசி பற்றாக்குறைக்குக் காரணம் குறித்துப் பேசும்போது எவ்வளவு போடப்பட்டுள்ளன, எவ்வளவு இருப்பு உள்ளது, மாவட்டங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டவை எவ்வளவு என்பதை வெள்ளை அறிக்கை வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இன்று சென்னை கிண்டியில் உள்ள டோக்கியோ தமிழ் சங்கம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட ஆக்சிஜன் செரியூட்டிகளை அமைச்சர் சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார். அப்போது பேசிய, அமைச்சர் சுப்பிரமணியன்

கடந்த ஜனவரி 16 அன்றிலிருந்து திமுக ஆட்சிக்கு வரும் வரை முந்தைய ஆட்சியில் போட்ட தடுப்பூசியில் 3.5 முதல் 4 லட்சம் வரை வீணாகிவிட்டதாக ஆர்டிஐயில் தகவல் பெறப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தபின் வீணானதாகச் சொல்லப்பட்ட 3.5 லட்சம் தடுப்பூசிகளையும் சேர்த்துக் கூடுதலாக 1.75 லட்சம் தடுப்பூசிகள் கூடுதலாக இருக்கும் வகையில் செலுத்தியுள்ளோம்.

இதனால், மருந்து அளவைக் குறைத்துப் போட்டீர்களா என்றால் இல்லை. கூடுதலாக 16% முதல் 24% வரை கூடுதலாக அடைக்கப்படும் மருந்தையும் வீணடிக்காமல் பயன்படுத்தியதால் போடப்பட்டது என தெரிவித்துள்ளார்.

Published by
murugan

Recent Posts

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

10 minutes ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

42 minutes ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

50 minutes ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

2 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

2 hours ago

இந்திய ராணுவம் தொடர் அதிரடி.., ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.!

புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…

2 hours ago