Thirupathur Bus Accident [File Image]
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே செட்டியாப்பனூர் பகுதியில் பெங்களூருவில் இருந்து வந்த அரசு சொகுசு பேருந்தானது சாலை நடுவே இருந்த தடுப்பு சுவரை மோதி எதிரே வந்த தனியார் ஆம்னி பேருந்து மீது மோதி விபத்துகுள்ளானது.
இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றவர் கைது..!
பெங்களூருவில் இருந்து வந்த அரசு பேருந்தும், சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற தனியார் சொகுசு பேருந்தும்விபத்துக்குள்ளான சம்பவம் அறிந்த உடன், மீட்பு படையினர மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் விபத்து குறித்து நேரில் ஆய்வு செய்தார்.
இந்த சம்பவம் குறித்து, வாணியம்பாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்தில் பயணித்ததில், சென்னையை சேர்ந்த கிருத்திகா, வாணியம்பாடி புதூர் பகுதியை சேர்ந்த முகமது பைரோஸ், சித்தூரை சேர்ந்த அஜீத், மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர் ஏழுமலை மற்றும் நதீம் ஆகியோர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…